மத்திய அரசு சமீபத்தில் அகவிலைப்படி குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து பல நற்செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இப்போது சத்தீஸ்கர் மற்றும் ஹரியானா மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சத்தீஸ்கர் மாநிலத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி அம்மாநில முதல்வர் விஷ்ணுத்தியோ சாய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சூப்பர் அப்டேட்.., புதுப்பேட்டை 2 ரெடி.. இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!
மேலும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளும் மறு ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தை தொடர்ந்து ஹரியானா மாநிலத்திலும் ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இதுவரை அம்மாநிலத்தில் அரசு ஊழியர்கள் 46 சதவீதம் அகவிலைப்படி பெற்று வந்த நிலையில் தற்போது அதை 50% குறிப்பிடத்தக்கது. தேர்தலுக்கு முன்னர் இது போன்ற அறிவிப்பு வெளியானதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.