மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் மத்திய அரசு இப்போது பல சலுகைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். மேலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சில திட்டங்களை விரிவுபடுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இல்லத்தரசிகளை மகிழ்விக்கும் வகையில் சூப்பரான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.
IPL தொடரின் 2வது பாதி போட்டிகள் UAEக்கு மாற வாய்ப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
இது தவிர இத்திட்டத்தின் கீழ் ஒரு சில குடும்பங்களுக்கு இலவச இணைப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட 37 லட்சம் பயனாளிகளுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது லோக்சபா தேர்தல் வரவு வரவுள்ளதால் இலவச கேஸ் இணைப்பு வழங்குவது மேலும் விரிவுபடுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் இலவச கேஸ் இணைப்பு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என கூறப்படுகிறது.