நாட்டில் பொருளாதார ரீதியாக சிரமப்படும் மக்களை ஊக்கப்படுத்த உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி மற்றும் சிறு குறு விவசாயிகள் என ஒவ்வொருவருக்கும் ரூ.500 முதல் ரூ.750 வரையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதற்காக மாதந்தோறும் சுமார் ரூ.700 கோடி செலவிடப்பட்டு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் 2023-24ம் நிதியாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் இவர்களுக்கான ஓய்வூதியம் இனி மாதந்தோறும் ரூ.1,000 ஆக உயர்த்த முதல்வர் அசோக் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். வருகிற ஜூன் 1ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது .
மின் கட்டண உயர்வுக்கு இது தான் காரணம்.., அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!!
இதற்காக கூடுதலாக ரூ.185 கோடி மாதந்தோறும் நிதி ஒதுக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அம்மாநில பொதுமக்கள் முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.