பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடிகர் பசுபதி, நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகன் என பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தை ஸ்டியோ கீரின் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.
இத்திரைப்படம் கோலார் தங்க வயல் பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, ‘தங்கலான்’ படத்தில் இடம்பெற்றுள்ள தனக்கான காட்சிகளை நடித்து முடித்திருக்கிறார் நடிகை பார்வதி. இந்த தகவலை சமூக ஊடகங்கள் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்த பார்வதி, ‘அன்பை விட, பணத்தை விட, புகழை விட எனக்கு உண்மையைக் கொடுப்பது தான் சிறந்தது என்று ஒரு நண்பர் எனக்கு அனுப்பி இருந்தார்.
பார்த்திபனை ஏமாற்றிய ஏ.ஆர். ரஹ்மான்….,இருந்தாலும் கடலை முத்து ரொம்ப ஸ்ட்ரிக்ட் பா..,
இந்த வரிகள் இந்த படத்திற்கான எனது அனுபவத்துடன் பொருந்தக்கூடியது. இந்த படத்திற்காக நான் செல்லும் இடமெல்லாம், நான் எடுக்கும் ஒவ்வொரு திருப்பமும், இந்தப் படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்துக்காக நான் எடுத்த ஒவ்வொரு தேர்வும் எப்போதும் நினைவில் இருக்கும்’ என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.