தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவர் நடிப்பில், கடந்த 2013ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் தலைவா. இப்படத்தில் இவருடன் இணைந்து அமலா பால், சந்தானம், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் துணை நடிகையாக நடித்திருந்தவர் தான் நடிகை ராகினி.
தற்போது இவரின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் மெலிந்த முகத்துடன் கண்ணாடி அணிந்து அடையாளம் தெரியாமல் மாறி உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் நம்ம ராகினி இவங்க ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே என்ற கருத்துகளை பதிவிட்டு வருகின்றன. மேலும் அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.