தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கிக்கொண்டிருக்கும் பிரபாஸ் கொரோனா பதிப்பின்போது மாநில மற்றும் மத்திய அரசுக்கு பல கோடிகளை நிதியாக வழங்கினார். அதனை தொடர்ந்து தனது ஜிம் ட்ரைனருக்கு 73 லட்சம் மதிப்புள்ள காரினை பரிசாக அளித்துள்ளார்.
பிரபாஸ்
தெலுங்கில் முன்னணி நடிகர்களின் ஒருவர் தான் பிரபாஸ். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். இப்படம் இவருக்கு ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது. இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் இவர் நடித்துக்கொண்டிருக்கும் ‘ராதே ஷியாம்’ படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்புகள் நடந்ததால் மார்ச் மாதம் இவர் இந்தியா திரும்பினார்.
இப்பொழுது அவரின் ஜிம் ட்ரைனரான லக்ஷ்மன் ரெட்டிக்கு ரூ.75 லட்சம் Range Rover Velar SUV என்ற மாடல் காரை பரிசாக அளித்துள்ளார். நீண்ட காலமாக அவரின் ஜிம் ட்ரைனராக பணிபுரிந்துள்ளார் லக்ஷ்மன் ரெட்டி. அதற்காக இந்த காரை அவருக்கு பரிசாக அளித்துள்ளார்.
2010 இல் லக்ஷ்மண் உலக ஆணழகன் பட்டத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. பிரபாஸ் மற்றும் லக்ஷ்மன் குடும்பத்தினர் காருக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. பிரபாஸின் இந்த செயலுக்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.