தமிழில் விஜய் தொலைகாட்சி மனசு வச்சு லொள்ளு சபாவை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழ் ரசிகர்கள் இணையத்தில் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.
ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கி இருக்கும் மக்கள்..!
கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது . இந்த நேரத்தில் பெரும்பாலான மக்கள் வீட்டிலே முடங்கி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களின் பிரத்யேக பொழுதுபோக்காக தொலைகாட்சியை பார்த்து வருகின்றனர் .
ரசிகர்கள் ஆர்வம்..!
தமிழில் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி பெரிய அளவில் மக்களை சிரிக்க வைத்த லொள்ளு சபா நிகழ்ச்சியை மீண்டும் ஒளிப்பரப்பலாம் என்று ரசிகர்கள் விஜய் தொலைகாட்சியை கேட்டு கொண்டுள்ளனர் . லொள்ளு சபா மறக்க முடியாத நகைச்சுவை தொடர்,இந்த தொடரில் இருந்து தான் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் என்று சொல்லபடும் பல நட்சத்திரங்கள் வந்திருக்கின்றனர் .
இதில் சந்தானம் ,ஸ்வாமிநாதன் மனோகர் ,யோகிபாபு, ஜாங்கிரி மதுமிதா, ஜீவா,லொள்ளு சபா பாலாஜி போன்ற பல முன்னணி நடிகர்கள் லொள்ளு சபாவில் இருந்து வந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |