தெலுங்கானா உள்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி – தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

0
Home Minister
Home Minister

தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலி அவர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு உள்ளதால், ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சருக்கு கொரோனா:

67 வயதான உள்துறை அமைச்சரின் ஐந்து பாதுகாப்புப் படையினருக்கு வெள்ளிக்கிழமை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, அதைத் தொடர்ந்து அவரது ஊழியர்கள் சுய தனிமைப்படுத்திக் கொண்டனர். அதே நேரத்தில் ஐந்து பாதுகாவலர்களும் அந்தந்த வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Home Minister
Home Minister

வெள்ளிக்கிழமை வரை, திரு. அலி பல மாநில நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்றார். சமீபத்தில், கோஷமஹால் காவல் மைதானத்தில் பல உயர் போலீஸ் அதிகாரிகளுடன் மாநில அரசின் மதிப்புமிக்க ஹரிதா ஹராம் திட்டத்தில் பங்கேற்றார். அமைச்சர் போலீஸ் டைரக்டர் ஜெனரல் எம்.மஹேந்தர் ரெட்டி, ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார், கூடுதல் சிபி (போக்குவரத்து) அனில் குமார் மற்றும் பிற அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர்.

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் மீது தாக்குதல் – அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அத்துமீறல்..!

சமீபத்தில், ஹைதராபாத் நகர காவல்துறையில் மூன்று மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளும், ஆர்.வி.பி.ஆர்.ஆர் தெலுங்கானா மாநில போலீஸ் அகாடமியுடன் மற்றொருவக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here