ரேஷன் அட்டைதாரர்களே., இன்று முதல் இந்த பொருட்களை தடையின்றி பெறலாம்? வெளியான அறிவிப்பு!!!

0
ரேஷன் அட்டைதாரர்களே., இன்று முதல் இந்த பொருட்களை தடையின்றி பெறலாம்? வெளியான அறிவிப்பு!!!
ரேஷன் அட்டைதாரர்களே., இன்று முதல் இந்த பொருட்களை தடையின்றி பெறலாம்? வெளியான அறிவிப்பு!!!

நாடு முழுவதும் ஏழை எளியோர் நலன் கருதி ரேஷன் கடைகளில் இலவச அரிசி, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கென நியமிக்கப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசிடம் முன்வைத்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் கவுரவ ஊதியம் ரூ.30,000, கருணை பணி நியமனம், அனைத்து பொருட்களும் PDS மூலம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அம்மாநில அரசிடம் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதற்கு அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முன்தினம் முதல் தெலுங்கானா ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலத்தில் ரேஷன் பொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதால் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகினர்.

தமிழக மக்களே., அரசு விரைவு போக்குவரத்தின் அட்டகாசமான சேவை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

இந்நிலையில் ரேஷன் ஊழியர் சங்கத்திடம் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கங்குலா கமலாகர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். இன்று (ஜூன் 7) முதல் தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தடையின்றி பொருட்கள் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here