தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிக்க ஆசிரியர்கள் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் பள்ளி கல்வித்துறை அவ்வப்போது அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது மகாராஷ்டிரா மாநில பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.
அதாவது இனி வரும் நாட்களில் பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் உடை அணிவதில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். மேலும் ஜீன்ஸ் டீ ஷர்ட் போன்றவை எக்காரணத்தைக் கொண்டு அணியக்கூடாது. இதற்கு பதிலாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் சல்வார், சுடிதார், குர்தா, துப்பட்டா, சேலை போன்றவற்றை அணியலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.