தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டு முடிவடைய இருப்பதால், பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள், கோடை விடுமுறை தினங்கள் திட்டமிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை குறித்த அறிவிப்பை, தற்போது அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 24 முதல் 31ஆம் தேதி வரை மற்றும் மே 1 முதல் 31ஆம் தேதி வரையிலும் கோடை விடுமுறை வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அடுத்த 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி திறப்பு ஜூன் 3ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.