கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்வில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அந்த கட்சி கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக முதல்வர் சித்தராமையா நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் அவர் அறிவித்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 2000 வழங்க இருக்கிறது. இதற்கு 1.2 கோடி பெண்களுக்கு ரூ.25,000-30,000 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
மேலும் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பெண்கள் ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை சேவா சிந்து போர்ட்டல் (sevasindhu.karnataka.gov.in) வழியாகவும் அல்லது ஆன்லைன் வாயிலாகவும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் குடும்பத்திற்கு ஒரு பெண் மட்டுமே பலன் பெற முடியும். மேலும் பெண்கள் மற்றும் அவருடைய கணவர் வரி செலுத்துவோராயின் அவர்களுக்கு ஊக்கத்தொகை வழக்கப்பட மாட்டாது.
சுற்றுலா பயணிகளுக்கு ஜில் ஜில் அறிவிப்பு.., சுருளி அருவியில் இன்று முதல் குளிக்க அனுமதி!!
அதுமட்டுமின்றி இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பணம் வழங்கப்படும். அதுக்காக பெண்கள் தங்களுடைய வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்க பட்டுள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும் என்று அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.