தமிழகத்தில் கிட்டத்தட்ட 4820 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றனர். அதில் சில கடைகள் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்து வருவதால் சில கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. ஒரு கட்டத்தில் கொள்ளை சம்பவம் கொலை சம்பவமாகவும் மாறி வருகிறது. இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் கொஞ்சம் அச்சத்தில் இருந்து வருகின்றனர். எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொறுத்த இருப்பதாக முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
அதுமட்டுமின்றி கிட்டத்தட்ட 3000 கடைகளுக்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில் புதிதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 500 கடைகளுக்கு கேமராக்கள் பொருத்த ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதன் மூலம் இனி டாஸ்மாக் கடைகளில் நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க முற்றுப்புள்ளியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.