தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதிக்கும், கார்த்திக்கும் தனது கம்பெனியில் தமிழ் பொறுப்பை கொடுத்துள்ள நிலையில் இப்பொழுது குடும்பமே சற்று நிம்மதியில் உள்ளது. ஆனால் அதற்கும் ஆப்பு வந்த விதமாக சரஸ்வதியின் குழந்தைக்கு ஏதோ ஆபத்து வந்து விட்டது.
ஜெயிலில் சரஸ்வதி பட்ட மன உளைச்சலால் குழந்தைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக டாக்டர் சொல்கிறார். மேலும் தமிழிடம் அர்ஜுன் நேரடியாகவே நான் தான் சரஸ்வதியை டார்ச்சர் செய்ய ஆள் வைத்ததாகவும் சொல்கிறார். இதனால் கோவமடையும் தமிழ் நீ பண்ண தப்பை நிரூபிச்சு உன்ன ஜெயிலுக்கு அனுப்புறேன் என்று சவால் விடுகிறார்.
அதுமட்டுமில்லாமல் ராகினி இன்னும் மடத்தனமாக அர்ஜுனை நம்பிக்கொண்டே உள்ளார். முதலில் தமிழ் ராகினிக்கு அர்ஜுன் தப்பானவர் என்பதை புரியவைக்க தான் நடவடிக்கை எடுப்பாராம். ஆதாரத்துடன் ராகினியிடம் காட்ட அவர் நொந்து போவாராம். ச்சே.., இப்படி பட்ட ஒரு ஆள தான் நான் நம்புனேனா?? என்று அர்ஜுனை உதறி விட்டு வந்து விடுவாராம்.