தமிழகம் மற்றும் புதுவையில் நேற்று 11ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கியது. இந்த தேர்வை தமிழகத்தில் மட்டும் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 89 ஆயிரத்து 736 மாணவர்கள், 4 லட்சத்து 30 ஆயிரத்து 471 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 207 பேர் தேர்வு எழுதினர். மேலும் இந்த தேர்வில் மாணவ, மாணவிகள் காப்பி அடிப்பதை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது தவிர தேர்வின் போது ஆள் மாறாட்டம் செய்வது, அதிகாரிகளிடம் முறைகேடாக நடந்து கொள்வது, விடைத்தாள்களை மாற்றம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் ஜெயில் தண்டனை மற்றும் நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று தொடங்கிய 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ் முதல் தாளில் 9844 மாணவர்கள் பங்கேற்கவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.