சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதற்கேற்றவாறு இன்று (பிப்.21) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுவதோடு, ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன்.. அதிரடியாக பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன்!!!
இருந்தாலும் நாளை (பிப்.22) அதிகாலை உள் தமிழகத்தில் லேசான பனிமூட்டமும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ய வாய்ப்புள்ளதால், குளிர்ந்த சூழல் நிலவும் என பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.