இந்தியாவில் லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், பல்வேறு கட்சியினருடனும் நேரில் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி 21) செயற்குழு கூட்டத்தையும் ஏற்பாடு செய்துள்ளார்.
நடிகர் அருள்நிதியின் மனைவியா இது?? பார்க்கவே ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்காங்களே!!
அந்த கூட்டத்துக்கு பிறகு அவர் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், என் சொந்த காசை வைத்து கட்சி நடத்துகிறேன், அனைவரும் வாக்களிக்க வேண்டும். அரசியலில் இருந்து என்னை போக வைக்க முடியாது, ஓட்டு போடாதவர்கள் முழு நேர குடிமகன்கள் இல்லை என்ற விமர்ச்சனத்துடன் தனது கருத்தை முடித்துள்ளார்.