தமிழக மதுபிரியர்களுக்கு ஷாக்., லோக்சபா தேர்தலால் இவ்ளோ நாள் டாஸ்மாக் கடை அடைப்பு? அரசு அதிரடி உத்தரவு!!!

0

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கேற்ப பல்வேறு முன்னேற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டாஸ்மாக் மதுபானக் கடை அடைப்பு குறித்த அறிவிப்பை, தற்போது வெளியிட்டுள்ளனர்.

அதன்படி ஏப்ரல் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை மதுபான கடை மூடி இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 2024 ஜூன் 4 ஆம் தேதியும், மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு மதுபிரியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

TN TRB யின் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற வேண்டுமா? இந்த அரிய வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here