தமிழகத்தில் “கலைஞர் மகளிர்” திட்டத்தின் மூலம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு, கடந்த 2023 செப்டம்பர் முதல் மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 1.7 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில், மாதந்தோறும் 15ஆம் தேதிக்குள் தடையில்லாமல் வரவு வைக்கப்பட்டு வருவதால், பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள், அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவித்துள்ளனர். எனவே கலைஞர் மகளிர் திட்டத்தின் ஏப்ரல் மாத தவணைக்கு சிக்கல் வருமா? என பலரும் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ரூ.1,000 வழங்குவதற்கு, எவ்வித தடையும் இல்லை என மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
IPL 2024: நாளை ஆரம்பமாகும் ஐபிஎல் தொடர்.. மகுடம் சூடப்போவது யார்?