இந்திய பிரீமியர் லீக் தொடரின் 17 வது சீசன் வரும் (நாளை) மார்ச் 22ம் தேதி முதல் 10 அணிகளுக்கு இடையே பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இத்தொடர்கான அட்டவணையை சமீபத்தில் தான் பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டது. இத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், 10 அணிகளில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்று கருத்து கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தற்சமயம் பேட்டிங், பவுலிங் மற்றும் பில்டிங் என மூன்றிலும் பலமாக திகழப்படும் CSK அணி தான் கோப்பையை வெல்ல 70% வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்களின் கணிப்பாகவே உள்ளது. ஆனால் மற்றொரு பக்கம் ரசிகர்களின் கணிப்பபடி பார்த்தால் மும்பை அல்லது சென்னை ஆகிய இரு அணிகளில் ஏதேனும் ஒரு அணி தான் கோப்பையை கைப்பற்றும் என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும் சிறப்பாக செயல்படும் அணி கோப்பையை வெல்லும் என்பதற்கு மாற்று கருத்தே இல்லை.