தமிழகத்தில் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வியை அதிகரிக்கவும், கலைத்திறனை மேம்படுத்தவும் பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் பல மாணவர்கள் தங்களது திறமையை வெளிக்கொண்டு வந்து சாதனை படைத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி வஞ்சி பாளையத்தில் தீரன் சின்னமலை மகளிர் கல்லூரியின் கட்டிடத்தை முதலமைச்சர் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பல சாதனைகளை படைக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் கல்வி, கலை அனைத்திலும் கை சேர்ந்தவர்களாக திகழ வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
விசித்திரமான ஹெல்மெட் அணிந்ததால் 10,000 அபராதம்…, தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை!!