ஒவ்வொரு மாநில போக்குவரத்து காவல் துறையும், சாலை போக்குவரத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக போக்குவரத்து காவல்துறை சமீபத்தில் இரு சக்கரம், ஆட்டோ, லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான வேகக்கட்டுப்பாட்டை அறிவித்தது. இதில், பைக் போன்ற டூவீலர் ஓட்டிகள் கட்டாயமாக தலை கவசமான ஹெல்மெட் அணிவது அவசியமாகும்.
இந்த ஹெல்மெட்டை வித்தியாசமான முறையில் அணிந்து வாகனம் ஒட்டியதன் மூலம் தென்காசி இளைஞருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, தென்காசி குற்றாலத்தில் பொம்மையின் முகம் போன்ற ஹெல்மெட்டை அணிந்து பைக்கில் உலா வந்ததுடன் பொது மக்களையும் அச்சுறுத்திய சுஜித் (23) என்ற இளைஞரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கண்டறிந்து போலீசார் ரூ. 10 ஆயிரத்தை அபராதமாக விதித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
மக்களே தயாராகிக்கோங்க.., நாளை இந்த மாவட்டத்தில் Power Cut.., வெளியான முக்கிய அறிவிப்பு!!