தமிழகத்தில் அண்மைக்காலமாக பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வந்தது. இந்த நிலையில் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்றும் (ஜன.16) நாளையும் (ஜன.17) தமிழகத்தில் ஓரிரு இடங்களில், அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், ஓரிரு இடங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. பகல் வேளையில் அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியஸிம், குறைந்தபட்ச வெப்பநிலையாக 20 டிகிரி செல்சியஸிம் இருக்கக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.