தமிழகத்தில் மாநில கல்வித்திட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 9 ஆம் வகுப்புக்கான ஆண்டு இறுதித் தேர்வு, ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற இருப்பதாக தெரிவித்து இருந்தனர். இதற்கிடையில் ரமலான் பண்டிகை பிறை அடிப்படையில் மாறுபடும் என்பதால், தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற இருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22 அன்றும், ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற இருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23 அன்றும் நடத்தப்பட இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!