தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருப்பதால், நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான இறுதித் தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதால், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
IPL 2024: CSK கேப்டன் தோனி இல்லையா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
அதன்படி அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கவும் அறிவுறுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.