தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்புக்கான ஆண்டு இறுதி தேர்வு., இந்த தேதி முதல் தான் Start? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருப்பதால், நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான இறுதித் தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 8 ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதால், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

IPL 2024: CSK கேப்டன் தோனி இல்லையா?? வெளியான அதிர்ச்சி தகவல்!!

அதன்படி அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஏப்ரல் 2 முதல் 12ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கவும் அறிவுறுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here