தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமின்றி பண்டிகை காலங்களில் சிறப்பு பரிசுபொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு வேலைப்பளு இரட்டிப்பு ஆகி வருவதால், ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கேற்ப பொங்கல் பரிசு பொருட்களை வழங்கிய ரேஷன் ஊழியர்களுக்கு ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.0.5 பைசா வீதம் ஊக்கத்தொகை வழங்க ரூ.1.07 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனை தொடர்ந்து கிராமப்புற ரேஷன் கடைகளில் ரூ.15,000க்கு மேல் விற்பனை செய்யும் மற்றும் நகர்ப்புற ரேஷன் கடைகளில் ரூ.25,000க்கு மேல் விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பு ரேஷன் கடை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் மிகுதியான மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் ஆட்டோ பயணத்திற்கான பிரத்யேக செயலி., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!