வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடருக்கு தயாராகும் வகையிலேயே, ஆசிய கோப்பை தொடரை நடத்த நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. இதன்படி, வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆசிய கோப்பை தொடர் ஒருநாள் வடிவில் நடைபெற இருக்கிறது. இதற்காக, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகள் தீவிரமாக தயாராகி வரும் இந்நிலையில், ஆசிய கோப்பையின் ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி வீரர்களுக்கான (ஆக்டிவ் பிளேயர்கள்) பட்டியல் வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த பட்டியலில், இந்தியாவின் ஜடேஜா மற்றும் பங்களாதேஷின் ஷகிப் அல் ஹசன் தலா 19 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளனர். இவர்களை தொடர்ந்து, இந்தியாவின் அஸ்வின் 14 விக்கெட்டுகள், பங்களாதேஷின் மஹ்முதுல்லாஹ் மற்றும் இந்தியாவின் குல்தீப் யாதவ் தலா 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.