தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளையுடன் நிறைவு., இந்த தேதியில் ரிசல்ட்., வெளியான அப்டேட்!!!

0
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளையுடன் நிறைவு., இந்த தேதியில் ரிசல்ட்., வெளியான அப்டேட்!!!
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற தேர்வுகளில் தமிழ் தேர்வு எளிதாகவும், ஆங்கிலம், இயற்பியல் போன்ற தேர்வுகள் கடினமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, நாளையுடன் (மார்ச் 22) முடிவடைய உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஏப்ரல் 1 முதல் 13 ஆம் தேதிக்குள் விடைத்தாள் மதிப்பீட்டு பணி நடைபெறும். அதைத்தொடர்ந்து மே 6ஆம் தேதி ரிசல்ட் வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here