கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக-வின் முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை, வருமான வரித்துறை தொடுத்திருந்தது. அதன் பேரில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றதன் தொடர்ச்சியாக, இன்று (மார்ச் 21) மதுரையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழக குடும்ப தலைவிகளே., மக்களவை தேர்தலால் ரூ.1,000க்கு சிக்கலா? தேர்தல் ஆணையர் விளக்கம்!!!
அதன்படி புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில், காலை முதல் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சென்னையில் உள்ள ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவன பகுதிகளில், வருமான வரித்துறை அதிகாரிகளும் இன்று (மார்ச் 21) காலை முதல் சோதனையில் ஈடுபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.