தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் “கலைஞர் மகளிர் திட்டம்” செயல்படுத்துவதற்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரேஷன் கார்டு பணியை மீண்டும் தொடங்க இருப்பதாக தெரிவித்து வந்தனர்.
அதன்படி ரேஷன் கார்டு அச்சிடும் பணியும் தொடங்கி இருந்த நிலையில், கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வினியோகம் செய்யும் பணி, மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் துறை ஆணையர் ஹர்சஹாய் மீனா தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
IPL 2024 : வெற்றியுடன் சீசனை துவங்குமா CSK?? டிஜிட்டல் ஒளிபரப்பு குறித்த விவரம்!!