தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்கை அடைய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கி பணிபுரிந்து வருபவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்று வரும் வகையில், சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC ஆப் மூலம் பதிவு செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
TET தேர்வுக்கு தயாராகிட்டு இருக்கீங்களா?? அப்போ இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!