கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வந்தது. இதைத்தொடர்ந்து ஓரிரு தினங்களுக்கு முன் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட தாக்கங்கள் இதுவரையிலும் சீர் செய்யப்படாமல் பெரும்பாலானோர் அவதியுற்று வருகின்றனர்.
இந்த சூழலில் கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘குறிப்பாக நாளை (டிசம்பர் 8) மற்றும் நாளை மறுநாள் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அரசு பள்ளிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு…, இப்படி ஒரு சம்பவமா?? வெளியான முக்கிய தகவல்!!