இந்த தகுதி தேர்வு அதிரடியாக தேதி மாற்றம்…, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!

0

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு வகையில் உதவி தொகையை வழங்கி வருகிறார். அந்த வகையில், தமிழகத்தில் உள்ள மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை வளர்க்க முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இந்த உதவித் தொகையை பெற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தகுதித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்படி, தமிழகத்தின் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பில் இணைந்தவர்களும், முதுநிலை படிப்பு முடிந்து முழு நேர முனைவர் படிப்பில் சேருவரும் முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகை பெற கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு வரும் டிசம்பர் 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மிக்ஜாம் புயல் தாக்கம் காரணமாக டிசம்பர் 17 ஆம் தேதிக்கு இந்த தகுதி தேர்வை மாற்றி உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக மக்களே., இந்த மாவட்ட பகுதிகளில் கனமழை தொடரும்? வானிலை மையம் வெளியிட்ட தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here