வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் சென்னை.., வீடுவீடாக போய் உதவி செய்த பிக்பாஸ் தர்ஷன்.., ரியல் ஹீரோவாக மாறிய தருணம்!!

0
சென்னையில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் தண்ணீர் கடலில் மிதக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 24 மணி நேரமும் தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை மீட்பு பணியினர் வேலை பார்த்து வருகின்றனர். அதே போல் வெள்ளத்தில் சிக்கி சாப்பாடு,தண்ணீர் இல்லாமல் கஷ்ட பட்டு வரும் மக்களுக்கு அரசு முதல் பிரபலங்கள் வரை நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான நாடு படத்தின் ஹீரோ பிக்பாஸ் தர்ஷன் தனது படக்குழுவுடன் சேர்ந்து தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை படகில் சென்று வழங்கி வருகின்றனர். இவரை போல சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற அளவு மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here