இந்திய சட்டத்தின் படி பெண் வீட்டாரிடம் இருந்து வரதட்சணை பெறுவது குற்றமான செயலாகும். ஆனால் இந்தியாவில் பெருவாரியான மாநிலங்களில் இன்னும் வரதட்சணை கொடுமை நடந்தது வருகிறது. அந்தவகையில் தற்போது வரதட்சணை காரணமாக ஒரு மருத்துவ பெண் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தவர் தான் மாணவி சஹானா.
இவர் நேற்று தான் தங்கியிருக்கும் விடுதியில் தனக்கு தானே அதிக அளவிலான மயக்க ஊசியை போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் எல்லோருக்கும் பணம் தேவை, பணம் தான் அனைத்தையும் வெல்லும் என கடிதம் எழுதி வைத்துள்ளார். இதையடுத்து தான் இவர் விரும்பிய நபர் அதிக வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இவ்வாறு வரதட்சணையின் காரணமாக இவர் உயிரிழந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.