தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான இறுதி தேர்வு, விரைவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் அடுத்த 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை, இப்போதே செயல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக உள்ளது.
இனி இவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்.., முதலமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!
அந்த வகையில் வழக்கத்திற்கு மாறாக, அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கையை மார்ச் 1 (நாளை மறுநாள்) முதல் தொடங்க வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ளூர் பிரமுகர்கள் பங்குடன் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். அதோடு தரமான கல்வி, நலத்திட்டங்கள் வழங்குவது குறித்த பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.