இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட இடங்களில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அப்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், மானிய விலையில் சிலிண்டர் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி போன்றவை செய்து தருவதாக பல வாக்குறுதிகளை அளித்தனர். தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ள நிலையில் அதை ஒவ்வொன்றாக முதல்வர் ரேவந்த் ரெட்டி நிறைவேற்றி வருகிறார்.
அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மக்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் மானிய விலையில் சிலிண்டர் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று 90 லட்சம் குடும்பங்களுக்கு 500 ரூபாயில் சிலிண்டர் மானியம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இத்துடன் 200 யூனிட் வரை இலவச மின்சார திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளார்.