மத்திய அரசு ஊழியர்களை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும், தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தியதாக தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் எந்தெந்த ஓய்வூதியதாரர்களுக்கு எல்லாம், அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என்ற அறிவிப்பை நிதித்துறை வெளியிட்டுள்ளது.
2024- 25 ம் கல்வியாண்டில் 10 & 12 ம் வகுப்பில் CBSE பாடத்திட்டம் – கல்வித்துறை தகவல்!
அதன்படி,
அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்றங்களின் ஓய்வூதியதாரா்கள், பொதுத் துறை, தன்னாட்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்பு, கூட்டுறவு நிறுவனம் ஆகியவற்றில் தகுதியுள்ள அரசுப் பணியாளர்கள், தமிழ்நாடு சிறப்பு விதிகளின் கீழ் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோர்களுக்கு, இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும் என தெரிவித்துள்ளனர்.