மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் அவர்கள் தலைமையிலான அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வை இன்று நான்கு சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அரசு உத்தரவின் படி டி ஏ ஆனது 42 சதவீதத்திலிருந்து தற்போது 46 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மாநில நிதித்துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 1, 2023 தவணைக்கான அகவிலைப்படி விகிதம் தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய அகவிலைப்படி உயர்வானது மார்ச் 1, 2024 முதல் பரிசீலிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் ஊழியர்களின் கைகளுக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தற்போது மத்திய பிரதேச அரசு ஊழியர்கள் 46 சதவீத அகவிலைப்படி உயர்வை பெறுவார்கள். வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அகவிலைப்படி உயர்வு குறித்தான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி அலை எழுந்துள்ளது.