தமிழ்நாட்டில் தை மாதம் முதல் நாள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழவர்களை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இப்பண்டிகையில் முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் இந்த ஆண்டு ஏழை எளிய மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் நியாய விலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 1000 ரூபாயும் வழங்கி வருகின்றனர். இந்த பரிசுத்தொகுப்புக்கு ஜனவரி 2 ஆம் தேதி முதல் டோக்கன் கொடுக்கப்பட்டு ஜனவரி 9 தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்நிலையில் தமிழக அரசு 1000 ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குதல் 92% நிறைவு அடைந்து விட்டதாகவும், டோக்கன் இல்லாதவற்களும் இன்று முதல் பரிசுத்தொகுப்பினை நியாவிலைக்கடைகள் மூலம் பெற்று கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர்.