ஓமைக்ரான் வைரஸின், மரபணு மாற்றம் அடைந்த பிஏ 2 வைரஸ் வேகமாக பரவி வருவதால், மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் கட்டுப்பாடுகளா??
தமிழகத்தில் பரவி வந்த கொரோனா வைரஸ் பரவல் சற்று குறைந்து வந்ததால், மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் சற்று குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது, இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் யாரும் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமில்லாமல், ஓமைக்ரானின் மரபணு மாற்றம் அடைந்த பிஏ 2 வைரஸ் பிரிட்டன் நாட்டிலிருந்து, பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பரவலின் வேகத்தை பொறுத்து மீண்டும் தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் கொண்டுவருவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்