தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி உதவித்தொகை, பணியிட மாறுதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதனை உரிய முறையில் செயல்படுத்துவது குறித்து விளக்கங்களும் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக C.E.O. இடமாறுதலுக்கான உத்தரவை கல்வித்துறை பிறப்பித்து இருந்தது. அதனை சரியாக பின்பற்றாத கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களால் சிக்கல் ஏற்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
பின்னர் முதல்வர் அலுவலக அதிகாரிகள் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து நிர்வாக விவகாரத்தில், மாவட்ட கலெக்டர்கள் தலையீடு இல்லாமல் இருக்க அரசு தரப்பில் சிறப்பு ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை வாசிகளே.., நாளை முதல் காலவரையற்ற ஸ்டிரைக்.., எதுக்கு தெரியுமா? வெளியான அறிவிப்பு!!!