சமீபத்தில் லாரி விபத்தில் சிக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து லாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தனியார் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் தனியார் தண்ணீர் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் நாளை முதல் தனியார் தண்ணீர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். மேலும் தண்ணீர் எடுக்க முறையான அனுமதி வழங்கும் வரை போராட்டம் தொடரும் என லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நொடிக்கு நொடி மாறும் வானிலை.., தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்!!!!