சர்வதேச அளவிலான அனைத்து அணிகளின் கவனமும் தற்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலக கோப்பை எதிர்நோக்கி தான் உள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள இந்த உலக கோப்பைக்கு தயாராகும் வகையிலேயே அனைத்து அணிகளும் இந்த வருட தொடக்கத்தில் இருந்து மற்ற அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த வகையில், இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடியது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த தொடர்களில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரரான சுப்மன் கில் கட்டாயமாக ஒரு நாள் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தொடக்க வீரராக இடம் பிடிப்பார் என தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளர் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார். சுப்மன் கில் இந்த வருடத் தொடக்கத்தில் இருந்து மட்டும் 12 இன்னிங்ஸில் விளையாடி ஒரு இரட்டை சதம், 3 சதங்கள் என 750 ரன்களை குவித்து அசத்தி உள்ளார். மேலும், இந்த வருடத்தில் மட்டும் ஒரு நாள் வடிவில் அதிக (5) அரைசதங்களை அடித்த இந்திய வீரராகவும் திகழ்கிறார்.
“ஆசிய கோப்பை பிளெயின் லெவனில் இவருக்கு கட்டாயம் இடம் கிடையாது”…, ராகுல் டிராவிட் அதிரடி பேட்டி!!