தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 1 மணி அளவில் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர், கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்த சேலம் வர உள்ளார்.
முதல்வரின் தாயார் காலமானார்:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட தென் மாவட்டங்களான தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகியவற்றிற்கு நேரில் பார்வையிட திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் முதல்வரின் தாயார் காலமானதை தொடர்ந்து பயணத் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
93 வயதான முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் முதுகு வலி மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சேலம் தனியார் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு முதல்வர் பழனிசாமி அவர்களுடன் சேர்த்து விஜயலக்ஷ்மி என்ற மகளும், கோவிந்தராஜ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி தவுசாயம்மாள் காலமானார். சேலம் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் வைக்கப்பட்டு உள்ள அவரது உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசுடன் எந்த போரும் இல்லை – துணைவேந்தர் விளக்கம்!!
இதனை தொடர்ந்து உறவினர்கள், ஊர் மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சடங்குகள் முடிந்து சிலுவம்பாளையத்தில் இன்று காலை உடல் தகனம் செய்யப்பட்டது. தாயாரை இழந்து வாடும் முதல்வர் பழனிசாமி அவர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.