விபத்தால் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் விபத்து மற்றும் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ள 50 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி

தமிழகத்தில் விபத்து மற்றும் உடல்நல குறைபாட்டால் உயிரிழந்துள்ள காவலர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘விபத்து மற்றும் உடல்நல குறைபாட்டால் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன்’

சசிகலா வருகை எதிரொலி – இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு தொகை வழங்கப்படும். அந்த வகையில் விபத்து மற்றும் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ள காவல் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு தொகையாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா மூன்று லட்சம் நிதியுதவி வழங்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here