தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக, கடந்த சில தினங்களாக லேசான முதல் மிக கனமழை வரை மழைப்பொழிவு பதிவாகி இருந்தது. இதன் காரணமாக கோடை வெயிலில் சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான தருணத்தை அனுபவித்து வந்தனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனால் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக வெப்பநிலையாக நேற்று பதிவாகியது. இந்த நிலையில் இன்றும் (ஜூன் 23) நாளையும் (ஜூன் 24) தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்., பரபரப்பு செய்தி!!!
இந்த மழைப்பொழிவு ஜூன் 27ஆம் தேதி வரையிலும் நீடிக்கவும் வாய்ப்புள்ளது. மேலும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.