தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருவதால் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து நேற்று (டிச.17) முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி இருக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
எனவே கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (டிச. 18) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.