மிக்ஜாம் புயல் காரணமாக பெய்து வந்த கனமழையால் சென்னை உட்பட வடமாவட்டங்களில் பெருமளவு பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு இருந்தது. இதையடுத்து தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் ஒரு வாரத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து நீர் நிரம்பியதால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு 80,000 கன அடிக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே பல வெள்ளம் சூழ்ந்த குடியிருப்புகளில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.