நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறும் நாட்களுக்கேற்ப பொது விடுமுறை வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதையடுத்து ஏப்ரல் 19ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உட்பட பலர் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.